தொடரை தக்க வைக்குமா இலங்கை?

தொடரை தக்க வைக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தாங்குகின்றனர்.

ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை பொறுத்தவரை, முதல் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது.

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் நான்காவது ஒருநாள் போட்டி, இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றிவிடும். இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை தக்கவைக்கும்.

ஆகையால் இப்போட்டி, இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net