மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ஒருவரை பாடசாலையில் புகுந்து மாணவியின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில் (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஆயுத பூஜை விடுமுறைக்கு முன்பாக ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று காலை பாடசாலை ஆரம்பித்ததும் 150 க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

அப்போது, ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, தலையில் பலத்த காயத்துடன் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net