2018 உலக அழகியை மயக்க வைத்த வெற்றி!

2018 உலக அழகியை மயக்க வைத்த வெற்றி!

மிஸ் கிராண்ட் 2018ஆம் ஆண்டுக்கான இன்டர்நேஷனல் உலக அழகி போட்டி மியான்மர் நாட்டில் நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் உலகின் பல நாட்டு அழகிகள் பங்கு பெற்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அழகி மீனாட்சி சவுத்ரி மற்றும் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா ஆகிய இருவரும் அழகிகளாக வெற்றி பெற்றனர்.

இந்த போட்டியில் உலக அழகியாக பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தான் வெற்றியாளர் என்ற அறிவிப்பை கேட்டதும் துள்ளி குதித்த அழகி கிளாரா, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றதால் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். பரபரப்புக்கு மத்தியில் அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது.

உலக அழகியாக முடிசூட்டப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய கிளாரா, ‘தான் முதல் பணியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சந்திக்கவிருப்பதாகவும், அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கு முன்மாதிரியாக அவர் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போவதாகவும் உலக அழகி தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net