ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர்: சபாநாயகர் அதிரடி!

ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர்: சபாநாயகர் அதிரடி!

ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார் என இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் ஆட்சியிலிருந்த ஆளும் கட்சியின் கூட்டணியிலிருந்த கட்சியுடன் பிளவு ஏற்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்சவை இலங்கையின் புதிய பிரதமராக பதவி அமர்த்தினார்.

திடீரென நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இது சட்டத்திற்கு விரோதமானது எனவும், நான் தான் இன்னமும் இலங்கையின் பிரதமர் எனவும் கூறி வந்தார்.

இதனிடையே, ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் அளவிலான பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்துப் புதிய பிரதமராகப் பதவியேற்ற ராஜபக்ச நாளை அமைச்சரவையை நியமித்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அதில்,”நாடாளுமன்றத்தில் ராஜபக்ச தனது பெருமான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடருமெனவும், அதுவரை ரணில் விக்கிரமசிங்கவே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, சபாநாயகரின் திடீர் அறிவிப்பால் இலங்கையில் மேலும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net