கோத்தபாய, பசிலுக்கு எதிராக அமெரிக்காவிடம் முறைப்பாடு!

கோத்தபாய, பசிலுக்கு எதிராக அமெரிக்காவிடம் முறைப்பாடு!

அரசியலமைப்புச் சட்டத்தை மீறி இலங்கைக்குள் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சியில் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பை வழங்கி வரும் இரண்டு அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர், அந்நாட்டு ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் கடிதம் ஒன்றின் மூலம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு நாட்டின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவது அமெரிக்க பிரஜைகளுக்கு யோக்கியமானது அல்ல என அவரது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் ஒருவரின் பெயரில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் இந்த விடயம் சம்பந்தமாக ராஜாங்க செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ராஜாங்க செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதி ஒன்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net