மைத்திரி மற்றும் மகிந்த தரப்பு கூட்டணியின் பெயர்.

மைத்திரி மற்றும் மகிந்த தரப்பு கூட்டணியின் பெயர்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் கீழ் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இனங்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தேர்தல் பரப்புரை பணிகளை முன்னெடுக்க சுசில் பிரேமஜயந்த மற்றும் பசில் ராஜபக்ச தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net