வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு – நால்வர் கைது!
வவுனியா சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நால்வரை மாமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாமடுவ பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு முதிரை மரகுற்றிகளை கடத்தப்படுவதாக மாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வவுனியா, சேமமடு பகுதியில் வைத்து முதிரை மரக்குற்றிகளை கடத்தப் பயன்படுத்தப்பட்ட பட்டா ரக வாகனத்தினையும், குறித்த வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கடத்தல் சம்பவத்தில் பெறுமதி வாய்ந்த 13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கெ.செனரத் தெரிவித்துள்ளார்.


