நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி, ஈகைப் போராளி முருகதாசன் நினைவேந்தல்.

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி, ஈகைப் போராளி முருகதாசன் நினைவேந்தல்.

இறுதி யுத்தகாலப்பகுதியில் எறிகணை வீச்சின்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமுர்த்தியின் 10 ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் ஐ.நா முன்றலில் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகளை நிறுத்துமாறு கோரி தீக்குளித்த முருகதாசன் ஆகியோரின் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்வில் அவர்களின் திருவுருவ படத்திற்கு தீபங்கள் ஏற்றியும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Copyright © 2699 Mukadu · All rights reserved · designed by Speed IT net