கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி வாவி பகுதியில், கை இல்லாத நிலையில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று காலை காயங்களுடன் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 45வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், வாவியில் ஓலையெடுக்கச் சென்ற வயோதிப பெண் ஒருவர் குறித்த சடலத்தினைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலத்தில் கையொன்று இல்லாத நிலையில் காயங்கள் காணப்படுவதாகவும், சடலத்தினை முதலை கடித்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் சடலத்தினை பார்வையிட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net