யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன் அடையாளந்தெரியாத நபர்களால் தீ!

யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பான கொட்டகைகள் அடையாளந்தெரியாத நபர்களால் தீ மூட்டப்பட்டுள்ளன!

யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் அடையாளந்தெரியாத நபர்களால் தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்வம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் முயற்சியின் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net