யாழில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை!

யாழில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை!

யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான ஐந்து சந்திப் பகுதியிலேயே மேற்படி சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் வீதியோரமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் பெருமளவான பொலிஸார் நிறுத்திவைக்கப்பட்டு இச் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

யாழ்.நகரத்திற்குள் உட்செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் பொலிஸார், வாகனத்திற்குள் தீவிர சோதனையினை மேற்கொள்வதுடன், வாகனத்தின் ஆவணங்கள் தொடர்பாகவும் சோதனை இடுகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net