மாத்தறையில் துப்பாக்கிச் சூடு- பொலிஸ் அதிகாரி பலி!

மாத்தறையில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தின் ஊருமொத்த பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோதே பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், அவர்களைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net