தீவிரவாத உரையை கேட்போருக்கு அன்பளிப்பு கொடுத்த சஹ்ரான்!

தீவிரவாத உரையை கேட்போருக்கு அன்பளிப்பு கொடுத்த சஹ்ரான்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹஷீமிற்கு நெருக்கமான ஐந்து பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிவ்லேகட பிரதேசத்தை சேர்ந்த ஹொரவிபத்தான பிரதேச செயலாளர் அபிவிருத்தி அதிகாரி உட்பட 5 பேரே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைக்கமைய சஹ்ரானின் தீவிரவாத உரை கேட்கச் செல்வோருக்கு பணம் மற்றும் மாடுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மாடும் 10000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net