புத்தளத்தில் விபத்து : மூன்று இளைஞர்கள் பலி!

புத்தளத்தில் விபத்து : மூன்று இளைஞர்கள் பலி!

புத்தளம் – பல்லம, நாகவில பகுதியில் மோட்டார் சைக்கிலும், கெப் வண்டியொன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்து, சிலாபம் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நாகவில பகுதியை சேர்ந்த 18 முதல் 20 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net