வடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை!

வடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை!

வடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுருவல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதற்காக வவுனியாவில் பௌத்த தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், வடக்கில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும், பௌத்த மதத் தலைவர்கள், தேவையற்ற பௌத்த ஊடுறுவல்கள் ஏற்படுவதற்கு எதிராக உறுதியுடன் செயற்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Copyright © 2607 Mukadu · All rights reserved · designed by Speed IT net