வவுனியாவில் மசூதியைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் சோதனை!

வவுனியாவில் மசூதியைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் சோதனை!

வவுனியா நகரிலுள்ள மசூதியைச் சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதிகளில் வீதிகள் தடை செய்யப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பு பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் கடும் சோதனையின் பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இச்சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பேரில் வான் ஒன்று கைப்பற்றப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net