வித்தியா கொலை வழக்கு: சட்டமா அதிபரது ஆலோசனைகளை பெற உத்தரவு!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்துச் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரது ஆலோசனைகளை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணையானது இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு மேற்படி கட்டளையை பிறப்பித்தார்.