சிறுமியின் வயிற்றில் பிரசவிக்கும் நிலையில் குழந்தை!

சிறுமியின் வயிற்றில் பிரசவிக்கும் நிலையில் குழந்தை!

கேகாலையில் வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற சிறுமியின் வயிற்றில் குழந்தை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக 14 வயதுடைய சிறுமி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வைத்தியர்கள். சிறுமியை பரிசோதித்த போது வயிற்றில் பிரசவிக்கும் நிலையில் குழந்தை இருப்பதாக தெரியவந்துள்ளது.

அரணநாயக்க பிரதேசத்தில் பிரபல பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வயிற்று வலி என வீட்டில் கூறியுள்ளார்.

உடனடியாக அரணநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சிறுமியை சோதனையிட்ட போது, குழந்தை ஒன்றை பிரசவிக்கும் நிலையில் சிறுமி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் வெளிநபருடன் உறவு வைத்து கொள்ளவில்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் பலமுறை அவரின் தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதற்கமைய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியர்களின் தகவலை அறிந்த சிறுமியின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Copyright © 1234 Mukadu · All rights reserved · designed by Speed IT net