#MeToo விவகாரம்: கவிஞர் பா.விஜயின் கவிதை!

#MeToo விவகாரம்: கவிஞர் பா.விஜயின் கவிதை!

#MeToo ஊடாக தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான பா.விஜய் #MeToo குறித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு மீ டூ கவிதை
எழுதட்டுமா என்றேன்
மீம்ஸ் போடுவார்கள்
மிரட்டினர் நட்புகள்
மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது

ஞாயிற்றுக் கிழமை என்பதால்
மீ டூ உடன்
மீனும் சேர்ந்து கொண்டது.

மீன் 2 வைப் பார்த்துக் கேட்டது
மீன் 1..
மீ டூ மீ டூ என்றால் என்ன?

மீன் 2 சொன்னது
மீ டூ மீ டூ என்றால்..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றானே பாரதி
அதுதான் மீ டூ

புரிந்த மீன் 1
தெளிந்து கேட்டது..

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றாயே பாரதி… ஒருசில
மாதர் செய்யும் மடமையை
யார் கொளுத்துவது?

மீனிங் புரிந்த மீன் 2
இது மீ டூ பிரச்சனை என்று மீண்டது.
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை

பா.விஜய்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net