சற்று முன்னர் இராஜாங்க அமைச்சரொருவர் நியமனம்!
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தேசிய ஒற்றுமை, கூட்டுறவு மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
இந்த நிலையில் 27ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்டு அதன் பின்னர் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் நியமனம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.