அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சியில் வரவேற்பு
இன்றைய தினம்(09) கிளிநொச்சிக் விஜயம் மேற்கொண்ட மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஈபிடிபி ஆதரவாளர்கள் கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வினை ஏற்பாடு செய்ததோடு, ஏ9 வீதியில் பட்டாசுகளை கொளுத்தி புதிய அமைச்சரை வரவேற்றனர்.
ஏ9 வீதியில் பட்டாசுகளை கொளுத்தியதனால் சிறுது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.