நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு.

நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு.

நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தினைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, நாடாளுமன்ற அமர்வை மீளக்கூட்டுவதற்கான வர்த்தமானி ஆவணத்தை வாசித்தார்.

தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் முன்வைத்த நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்காரணமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் யோசனையினை சபை முதல் தினேஸ் குணவர்த்தன முன்வைத்திருந்தார்.

இந்தநிலையிலேயே நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபநாயகர் அறிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net